Type Here to Get Search Results !

பாலக்கோடு அடுத்துள்ள கணபதி கொட்டாய் கிராமத்தில் அனுமதியின்றி நொரம்பு மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த  கணபதி  கொட்டாய் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில்  சட்டவிரோதமாக அனுமதி இன்றி செம்மண் எடுப்பதாக பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகத்திற்க்கு  இரகசிய தகவல் கிடைத்தது,


இதையடுத்து தாசில்தார் ஆறுமுகம் இன்று மாலை 5  மணிக்கு கணபதி  கொட்டாய் பகுதியில் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் டிராக்டரில் செம்மண்  அள்ளி கொண்டிருந்தவர்கள் தாசில்தாரை கண்டதும் டிராக்டரை விட்டு விட்டு தப்பியோடினர்.


1 யூனிட் செம்மனுடன் 3 இலட்ச ரூபாய் மதிப்புள்ள டிராக்டர்  மற்றும் டெய்லரை பறிமுதல் செய்து பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். இது குறித்து பாலக்கோடு  போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடி தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies