Type Here to Get Search Results !

மை தருமபுரி அமரர் சேவை மூலம் 99ஆவது ஆதரவற்று இறந்த புனித உடல் நல்லடக்கம் செய்தனர்.


மை தருமபுரி அமரர் சேவை மூலம் 99ஆவது ஆதரவற்று இறந்த புனித உடல் நல்லடக்கம் செய்தனர், இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் சதீஸ்குமார் கூறுகையில், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இயற்கை மரணம் அடைந்துள்ளார். அவரது பிரதத்தை கைப்பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை எனபது தெரியவந்தது, அதனை தொடர்ந்து காரிமங்கலம் காவல் நிலைய காவலர் ராஜேஷ் குமார், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், தமிழ்செல்வன், சண்முகம், முஹம்மத் ஜாபர் ஆகியோர் இறந்தவரின் புனித உடலை தங்கள் உறவாக எண்ணி இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 99 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம், என அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies