Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீராம் சில்க்சில் 500 க்கும் மேற்பட்ட தையற்கலைஞர்களை கெளரவிக்கும் விழா.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீராம் சில்க்ஸ் சார்பில் தையற்கலைஞர்களை கெளரவிக்கும் விழா மருத்துவர் பாலகிருஷ்ணன்  அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் காலம் காலமாக தையற் தொழிலில் ஈடுபட்டு வரும் தையற்கலைஞர்களை கெளரவிக்கும் வகையில் ஸ்ரீராம் சில்க்ஸ் மற்றும் கே.ஜி.எம்.நிறுவனம் சார்பில் நடைப்பெற்ற கெளரவிப்பு விழாவில் 500க்கும் மேற்பட்ட ஆண், பெண்  தையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.


இவ்விழாவில் மூத்த தையல் கலைஞர்களை கெளரவித்து பொன்னாடை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேசிய மருத்துவர் பாலகிருஷ்ணன் தையற் கலைஞர்களின் தொழில் முன்னேற்றத்திற்க்கு கே.ஜி.எம்.நிறுவனம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், தையற்கலைஞர் ஒற்றுமையுடன் செயல்பட்டு மேலும், மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


இவ்விழாவில் கலந்து கொண்டு அனைத்து தையற்கலைஞர்களுக்கும் தையற்உபகரணங்கள் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி முடிவில் மூத்த தையற்கலைஞர் சன் டைலர்  இம்ரான் நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies