காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை தமிழக எல்லையை வந்தடைந்தது.
நேற்று இரவு வினாடிக்கு 14000 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து, படிப்படியாக அதிகரித்து இன்று (16.07.2024)காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 19000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்துள்ளது.

