Type Here to Get Search Results !

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,52,000 கன அடியாக அதிகரித்துள்ளது.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் அதனுடைய முழு கொள்ளளவை எட்டியுள்ளது இதனால் கபினி  கிருஷ்ணராஜ் சார் ஆகிய இரு அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை  நிலவரப்படி 1,35,000  கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து     தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 1,52,000 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.


இந்த நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் மூழ்கடித்தவாறு செல்கிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 13 வது நாளாக  நீடித்து வருகிறது.


இது மட்டுமல்லாமல் கர்நாடகா அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி  நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோரம் உள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies