Type Here to Get Search Results !

சிதம்பரம் மற்றும் விழுப்புரம் வெற்றியை கொண்டாடிய பென்னாகரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.


பென்னாகரத்தில்  சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும்  கொண்டாடிய விடுதலை சிறுத்தை கட்சியினர்.

இந்தியா கூட்டணி சார்பில் தமிழகத்தில் திமுக உடனாட கூட்டணியில் இடம் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் தொகுதியில் எழுச்சித் தமிழர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் போட்டியிட்டார் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் முனைவர் ரவிக்குமார் அவர்கள் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிட்டு  கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தன தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில்  முன்னணியில் இருந்து வந்த நிலையில்  கடைசி கட்ட சுற்றுகளில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தனர்.


இதனைத் தொடர்ந்து  தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் கட்சித் தலைவர்கள் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில்  வெற்றி பெற்றனர்.


இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அரசு தலைமை மருத்துவமனை எதிரில் உள்ள  அம்பேத்கர் சிலை அருகில் ஒன்று கூடி எழுச்சித் தமிழர் வாழ்க என்ற கோஷத்துடன் தங்களுடைய கட்சி அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில்   பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள்  வழங்கினர்.


இந்த வெற்றிக்கு  உழைத்ததற்கு கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் கருப்பணன் ஆட்டோ நாகராஜ் முன்னாள் இந்நாள் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies