Type Here to Get Search Results !

தருமபுரி பூமாலை வணிக வளாக கடைகள் வாடகைக்கு விடப்படவுள்ளது.


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தருமபுரி மாவட்டம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் கீழ் தருமபுரி நகராட்சியில் பேருந்து நிலையம் அருகில் செயல்படும் பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடைகள் மற்றும் வட்டார அளவில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு கடைகள் ஒதுக்கீடு செய்து வாடகைக்கு விடப்படவுள்ளது.

எனவே, விருப்பமுள்ள சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தங்களது விண்ணப்பங்களை திட்ட இயக்குநர்/ இணை இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இரண்டாம் தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடம், மாவட்ட ஆட்சியர் அலுலவகம், தருமபுரி - 636 705 என்ற முகவரிக்கு 28.06.2024 பிற்பகல் 3.00 மணிக்குள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப தெரிவிக்கப்படுகிறது. தாமதமாகவோ நாள் கடந்தோ வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


மேலும், விவரங்களுக்கு அலைபேசி எண். 04342 233298 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies