Type Here to Get Search Results !

5வது மைல்கல் பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிள் மீது JCB வாகனம் மோதியதில் நிதி நிறுவன மேலாளர் பலத்த காயம்.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த தேக்லான்.கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது.34) இவர் தர்மபுரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 20ம் தேதி இரவு  வேலை முடிந்து வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தார், 5வது மைல்கல் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஜே.சி.பி.எந்திரம் சுரேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவ்வழியாக சென்றவர்கள் இவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சுரேஷ் மாரண்டஅள்ளி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies