Type Here to Get Search Results !

அலுவலகத்தில் இன்று (25.06. 2024) புலிக்கரை உள் வட்டத்திற்கான பசலி 1433-ம் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)நிகழ்ச்சி.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர்  அலுவலகத்தில் இன்று (25.06. 2024) புலிக்கரை உள் வட்டத்திற்கான பசலி 1433-ம் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)நிகழ்ச்சியில் வருவாய் தீர்வாயம் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையேற்று, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து வரும் பதிவேடுகள் நில அளவு  உபகரணங்கள் மற்றும் வருவாய்த் துறையினுடைய ஆவணங்களை ஆய்வு செய்தார்.


இந்த நிகழ்ச்சியில் பாலக்கோடு வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (நீதியியல்) மற்றும்  தனி வட்டாட்சியர் (சபாதி) மற்றும் துணை வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர், நில அளவு பிரிவு அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பிறதுறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies