Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மாரண்டஅள்ளியில் பணி ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ.க்கு, பணி நிறைவு விழா நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், வெள்ளக்கல் அடுத்த பூமல்மடுவு கிராமத்தில் உள்ள விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது. 60), இவர் காவல் உதவி ஆய்வாளராக தர்மபுரி மாவட்டத்தில், பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கடந்த 38 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர், வரும் மே.31 ம் தேதி பணியிலிருந்து  ஓய்வு பெற உள்ளார்.இவர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு சக போலீசார் பணி நிறைவு விழா நடத்தினர்.


இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், பாலக்கோடு டி.எஸ்.பி.சிந்து  ஆகியோர் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர். இவ்விழாவில் பேசியவர்கள் கடந்த 38 வருடமாக காவல்துறையில் நேர்மையாகவும், கடமை தவறாமல் பணியாற்றி அரசுக்கும் பொதுமக்களுக்கும் உறுதுணையாக இருந்ததை நினைவு கூர்ந்து சால்வை அணிவித்து  பாராட்டு தெரிவித்தனர்.


இந்நிகழ்ச்சியில் திரளான போலீசார், அரசியல் பிரமுகர்கள்  மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884