Type Here to Get Search Results !

மை தருமபுரி அமைப்பினருக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கிய ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி.


தருமபுரி மாவட்டத்தில் மை தருமபுரி தன்னார்வ அமைப்பின் மூலம் பல மனிதநேயமிக்க சேவைகளை தருமபுரி மாவட்டம் முழுவதும் அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். இதில் தினந்தோறும் பசித்தோருக்கு உணவு வழங்கும் மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க உணவு சேவை திட்டம், அவசர ரத்ததான உதவி சேவை திட்டம், ஆதரவற்று இறந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் மை தருமபுரி அமரர் சேவை திட்டம், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள், முதியோர்கள் காப்பகங்களுக்கு உதவி செய்யும் முதியோர் சேவை திட்டம், பெற்றோர் இல்லாத குழந்தைகள், மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மேலங்கி வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உதவி, மருத்துவ சேவைகள், மாவட்டம் முழுவதும் மை தருமபுரி மணீஷ் மருத்துவ சேவை திட்டம் போன்ற மனிதநேயமிக்க சேவைகளை பாராட்டி தருமபுரி ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி சார்பாக மை தருமபுரி அமைப்பினருக்கு சிறந்த சமூக சேவை விருது வழங்கி கௌரவக்கப்பட்டது. 

இந்த விருதினை காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்கள், பாராமெடிக்கல் கல்லூரி நிறுவனர் சிலம்பரசன் ஆகியோர் மை தருமபுரி அமைப்பினர் தமிழ்செல்வன், அருள்மணி, அருணாசலம், சந்திரசேகரன், அருண் பிரசாத், ஜலபதிராஜா, ராகவ் திலக், மருத்துவர் முஹம்மத் ஜாபர் ஆகியோருக்கு வழங்கினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884