காலி குடங்களை வைத்து குடிநீர் வழங்க வேண்டி மறியல் போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

காலி குடங்களை வைத்து குடிநீர் வழங்க வேண்டி மறியல் போராட்டம்.


தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த பறையப்பட்டி கிராமத்தில் குடிநீர் வழங்க வேண்டி கிராம மக்கள் பெண்கள் சாலையில் காலி குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். 

பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சுமார் ஐந்து மாதம் காலமாக தங்களுக்கு குடிநீர் வழங்கவில்லை எனவும் இதனால் பள்ளி குழந்தைகள் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆவேசமடைந்த பெண்கள் குடிநீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து மொரப்பூர் - எச்.ஈச்சம்பாடி செல்லும் சாலையில் காலி குடங்களை வைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.