டாக்டர் அம்பேத்கர் 133வது பிறந்த நாளை முன்னிட்டு அரூர் அம்பேத்கர் நகரில் யாசட் சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 13 ஏப்ரல், 2024

டாக்டர் அம்பேத்கர் 133வது பிறந்த நாளை முன்னிட்டு அரூர் அம்பேத்கர் நகரில் யாசட் சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது


அரூர் அம்பேத்கர் நகரில்  டாக்டர் அம்பேத்கர் பிறந்த.நாளை முன்னிட்டு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது, இம்முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை, காது, மூக்கு, தொண்டை, சளிகாய்ச்சல், பல் மருத்துவம்  உள்ளிட்ட நோயாளிகளுக்கு  மருத்துவ சோதனை செய்து ரூ.50000 மதிப்புள்ள மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. 


இம்மருத்துவ சிறப்பு முகாமில் டாக்டர்  சுகனேஸ்வரன் (அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மருத்துவர்), டாக்டர்  சதீஸ் (பொது மருத்துவம்), மரு பாலசுந்தரம், மரு செல்வராஜ், மரு  கனிமொழி (மகப்பேறு மருத்துவம்), மரு அருண் பாலாஜி (குழந்தை நலம்), மரு பிரதாப் (பொது மருத்துவம்), மரு நிவேதிதா, மரு ராகுல் டிராவிட், மரு கணேஷ், மரு சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளித்து நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். 


இம்முகாமிற்க்கு சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர், இதில் யாசட் சங்க தலைவர் க.வசந்த் செயலாளர், விடுதலைவேலன் பொருலாளர் மருத்துவர் சதீஸ் விஞ்ஞானி இரவி க.புனிதராஜ் அலுவலக செயலாளர் இராகுல்சித்தார்த் அ.நிகில்வளவன் , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.