பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்திலிருந்து தொண்டு நிறுவன கூட்டமைப்பின் சார்பில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 ஏப்ரல், 2024

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்திலிருந்து தொண்டு நிறுவன கூட்டமைப்பின் சார்பில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, தாசில்தார் அலுவலகத்திலிருந்து 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம்  உதவி தேர்தல் அலுவலர் தனப்பிரியா தலைமையில்  நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் ARDS ஆனந்தன் முன்னிலை வகித்தார். வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் பொதுமக்கள் வாக்களிப்பது குறித்து  விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலத்தை  தாசில்தார் அலுவலகத்தில் இருந்து உதவி தேர்தல் அலுவலர் தனப்பிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்த ஊர்வலமானது கடைவீதி, பஸ் நிலையம், ஸ்தூபி மைதானம், காவல்நிலையம் வழியாக பேரூராட்சியை அடைந்தது, ஊர்வலத்தின் போது பொதுமக்கள் வாக்களிப்பது ஜனநாயக கடமை, நல்லாட்சி அமைய வாக்களிப்போம், வாக்களிப்ப்பது நமது அடிப்படை உரிமை, ஜனநாயகத்தை காக்க வாக்களிப்போம் என்று  கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர்.


இந்த ஊர்வலத்தில் மகளிர் சுய உதவிக்குழு இயக்குநர்கள் சந்திரகலா, ரங்கநாயகி, வாசகர், மகளிர் சங்க தலைவிகள், உறுப்பினர்கள், பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.