அரூர் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு கண்காட்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 பிப்ரவரி, 2024

அரூர் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு கண்காட்சி.


அரூர் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது, அரூர் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பேருந்து பயணிகளுக்கும் மற்றும்  பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பற்றிய குறும்பட கண்காட்சி நடைபெற்றது.

இதையடுத்து அங்குள்ள பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது, இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ஏ.செந்தில்குமார், நேரம் காப்பாளர் ஏ.எஸ்.செல்வம், ஓட்டுநர் பயிற்றுநர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->