Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இன்றி தவிப்பு மலை கிராம மக்கள் சாலை மறியல்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பானா கட்டு குறவன் தின்னை ஆகிய பகுதிகளில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தினருக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இதுனால் வரை இப்பகுதிக்கு வரவில்லை  இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும்  பயனளிக்காததால் இப்பகுதி கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இன்று சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


தகவல் அறிந்து வந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மேனேஜர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விடுவதாக உறுதியளித்தனர் அதன் பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர் இதனால் இப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies