Type Here to Get Search Results !

அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக "விலங்கியல் மன்ற துவக்க விழா" நடைபெற்றது.


தர்மபுரி அடுத்த கலெக்டர் அலுவலகம் அருகில் செயல்பட்டு வரும் அரசு கலை கல்லூரி தர்மபுரி இல் விலங்கியல் மன்ற துவக்க விழா நடைபெற்றது இந் நிகழ்வில் ஜீவநந்தினி மூன்றாம் ஆண்டு மாணவி விலங்கியல் துறை வரவேற்புரை நிகழ்த்தினார். 

மன்றத் துவக்க விழாவில் நடைபெற்ற ஓவிய போற்றி மற்றும் கதை எழுதுதல் கவிதை வாசித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சிறப்பு விருந்தினர், மருத்துவர் இரா செந்தில் வழங்கினார். முனைவர் விஜய தேவன் இணை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் விலங்கியல் துறை அரசு கலைக்கல்லூரி தர்மபுரி அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார். இதற்கு முன்னதாக முனைவர் கண்ணன் முதல்வர் அரசு கலைக் கல்லூரி, தலைமை உரை நிகழ்த்தினார்.


மருத்துவர் செந்தில் தங்கம் மருத்துவமனை தர்மபுரி அவர்கள் சிறப்பு விருந்தினரால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சொற்பொழிவு வழங்கினார் ஜீவிதா  இரண்டாம் ஆண்டு மாணவி விலங்கியல் துறை நன்றியுரை நிகழ்த்தினார் இந்நிகழ்வை விலங்கியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies