Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலக முன்பு அதிமுக கட்சியின் சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் தொடர்ந்து பட்டியலின மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மீது வன்கொடுமைகளை ஏவி கொடுரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத  தி.மு.க அரசைக் கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும் கண்டன ஆர்பாட்டம் செய்தனர்.

இதில் அதிமுக அமைப்பு செயலாளர் சிங்காரம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர் வெற்றிவேல் மாநில விவசாய அணி தலைவர் டி ஆர் அன்பழகன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, மற்றும் அனைத்து மாவட்ட,ஒன்றிய,நகர பேரூர் கிளை கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884