Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தை அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

Top Post Ad


ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மற்றும் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் அமாவாசை நாட்களில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். 

அதேபோல்தை அமாவாசையான இன்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை, நாகர்கோவில் பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை,பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.


இதில் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies