Type Here to Get Search Results !

மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஆதரவற்று இறந்த 80 வயது முதியவர் நல்லடக்கம்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்தில் படுகாயம் அடைந்துள்ளார். அவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் இவரைப் பற்றி விசாரித்ததில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்து, மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் அவரது உடலை பெற்று இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். 


இந்த நிகழ்வில் ஓசூர் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சரவணன், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாச்சலம், சமூக சேவகர் மருத்துவர் முகமத் ஜாபர் ஆகியோர் நல்லடக்கம் செய்தனர். இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 77 ஆதரவற்று இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies