Type Here to Get Search Results !

வரும் 6,7 தேதிகளில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்.


அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித்திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெறத் துணைபுரியும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நடத்தப்பெறுகிறது.  தருமபுரி மாவட்டத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்  06.02.2024,  07.02.2024 ஆகிய இரண்டு நாள்கள் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணிவரை நடைபெறும். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பெறும்.


மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை/வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்களிலிருந்து அலுவலர் ஒருவர் மற்றும் பணியாளர் தொகுதி பொறுப்பு வகிக்கும் கண்காணிப்பாளர் (அ) உதவியாளர் (அ) தட்டச்சர் நிலையில் ஒருவர் என இருவர் இரண்டு நாள்கள் நடைபெறும் ஆட்சிமொழிப் பயிரங்கத்திலும் 07.02.2024 பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் ஆட்சிமொழிக் கருத்தரங்கில் மாவட்ட நிலை அலுவலர்கள், கோட்ட அலுவலர்கள், வட்ட நிலை அலுவலர்கள், பல்வேறு துறை அலுவலகங்களின் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். பயிலரங்கத்தின் வாயிலாக ஆட்சிமொழித்திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச் செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள் , அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே ஒப்பம், சுருக்கொப்பமிட வேண்டும் என்பது முதல் அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழித் திட்ட அரசாணைகள் மற்றும் பட்டறிவும் எடுத்துரைக்கப்படும்.


தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies