Type Here to Get Search Results !

பாலக்கோடு மற்றும் வெள்ளிச் சந்தையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் மற்றும் சீல்.


தர்மபுரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை  கண்காணித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக மாவட்டம் முழுவதும் இரு துறையும் இணைந்தும், தனித்தனியாகவும் கடைகளில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால் மேற்படி கடைக்கு அபராதம் மற்றும் கடை இயங்க  தடை மேலும் முதல் தகவல் அறிக்கை பதிந்து கோர்ட் நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, சுகர் மில் போன்ற பகுதிகளில் ஆய்வு செய்தார். ஆய்வில் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகில் ஒரு தேநீர் பீடாகடையிலும், வெள்ளிச்சந்தை நான்கு ரோடு பகுதியில் ஒரு பேன்சி ஸ்டோர் என இரண்டு கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லீப் உள்ளிட்ட வகையிலான  புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 


மேற்படி செயலுக்கு  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் இரண்டு கடைகளுக்கும் தலா ரூபாய்.5000 உடனடி அபராதம் மற்றும் கடை இயங்க தடை விதித்து  நேரில் வழங்கிட உத்தரவிட்டார்.  


ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் செலுத்த உரிய தலைப்பிலான சலான் ரசீது மற்றும் கடை இயங்க தடை விதித்த நோட்டீஸ்  வழங்கி கடையை மூடச் செய்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884