Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டம் வருகின்ற 31.01.2024 அன்று காலை 09.00 மணி முதல் 01.02.2024 காலை 09.00 மணி வரை நடைபெற உள்ளது.


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டம் வருகின்ற 31.01.2024 அன்று காலை 09.00 மணி முதல் 01.02.2024 காலை 09.00 மணி வரை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரால் அறிவிக்கப்பட்ட "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டம் ஒவ்வொரு மாதமும் நான்காம் புதன் கிழமை மாவட்டத்தின் ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 ஜனவரி மாதத்திற்கான முகாம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் வரும் 31.01.2024 அன்று காலை 09.00 மணி முதல் 01.02.2024 காலை 09.00 மணி வரை நடைபெற உள்ளது.


மேற்படி நாளில் மாவட்ட ஆட்சியர் தங்கியும் கள ஆய்வில் ஈடுபடுவதுடன், அனைத்து அரசு துறை அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.


மேலும் 31.01.2024 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அலுவலர்கள் மக்களின் குறைகளை கேட்டறிந்தும், அரசு திட்டங்களை செயல்படுத்துதல் தொடர்பாக பொது மக்களிடமிருந்து கருத்துகளையும் பெறப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884