Type Here to Get Search Results !

மொரப்பூர் அருகே 16 வயது சிறுமி கர்ப்பம்; சிறுவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.


மொரப்பூர் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் மீது அரூர் மகளிர் போலீசார் போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சேர்ந்த 16 வயது சிறுமியும் 17 வயது சிறுவனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து  வந்துள்ளனர், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவில் அந்த சிறுமியை சிறுவன் திருமணம் செய்து கொண்டு கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.


இந்நிலையில் கர்ப்பம் அடைந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது, இதையடுத்து சிறுமியை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி மைனர் என்பதை அறிந்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்,  தொடர்ந்து சிறுமி அளித்த புகாரின் பேரில்  அரூர் அனைத்து மகளிர் போலிசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாகிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies