Type Here to Get Search Results !

தர்மபுரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர்.


தர்மபுரியில் கடந்த 15ஆம் தேதி தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது இதில் தலைவர் பதவிக்கு சிவம், செயலாளர் பதவிக்கு தர்மன், துணைத் தலைவர் பதவிக்கு முனிராஜ், பொருளாளர் பதவிக்கு சதாசிவம், துணை செயலாளராக  குமரன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.


பின்னர் சக வழக்கறிஞர்கள் பதவியேற்று கொண்டவர்களுக்கு சால்வை அணிவித்தும் பூங்கத்துக்களை கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் பின்னர் மூத்த முன்னால் தலைவர் அப்புன் கவுண்டர் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். 


இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள், வீராசாமி, கோவிந்தராஜ், கிருஷ்ணராணி, மாதேஷ், கார்த்திகேயன், சங்கீதா, செல்வகுமார், ஈஸ்வரன், மற்றும் மூத்த நிர்வாகிகள் டி ராஜேந்திரன், ஆர்.சந்திரசேகரன், எம்டி. முனுசாமி, ரத்தினம், செல்வராஜ், எஸ். பாலகிருஷ்ணன் பி.சுரேஷ், மணிமுடி, சீரியம்பட்டி சரவணன் ஆகிய இருபால் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies