Type Here to Get Search Results !

தருமபுரி திமுக எம்.பி.செந்தில்குமார் திமுகவில் இருந்து விலகியதாக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி அலுவலகத்தில் புகார்.


தருமபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிணராக உள்ளவர் திமுகவை சேர்ந்த டி.என்.வி.செந்தில்குமார், இவர் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில் சில மர்ம நபர்கள் இவர் திமுக கட்சியிலிருந்து விலகியதாக கூறி பிரபல செய்தி நிறுவனத்தில் வெளியான செய்தி போல் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டதால் திடிர் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல செய்தி நிறுவனம் இது போன்ற செய்தியை நாங்கள் வெளியிடவில்லை என மறுப்பு தெரிவித்த நிலையில்,


தருமபுரி நாடாளுமன்ற உறுப்பிணர் செந்தில்குமார் சார்பில் அவரது உதவியாளர் மகேஷ்குமார் தர்மபுரி எஸ்.பி அலுவலகத்தில் தருமபுரி  நாடாளுமன்ற உறுப்பிணரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அவதூறாக, பொய்யான வதந்தி பரப்பிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார். அது சமயம் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தருமபுரி திமுக எம்.பி.செந்தில்குமார் திமுகவில் இருந்து விலகியதாக பரவிய செய்தி பெரும் பரப்பப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884