மாரண்டஅள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த பேரூராட்சி தலைவர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 டிசம்பர், 2023

மாரண்டஅள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த பேரூராட்சி தலைவர்.


தருமபுரி மாவட்டம் மரண்டஹள்ளி தனியார் மண்டபத்தில்   பொதுமக்களின் நீண்ட நாள் தீர்க்கப்படாத பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகளை 30 நாட்களுக்குள்  தீர்க்கும் பொருட்டு தமிழக முதல்வர் அறிவித்த மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சிக்கு  பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை  துவக்கி வைத்தார்.


நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, சுகாதார துறை, காவல் துறை, வேளாண்மைத் துறை, மாற்று திறனாளிகள் நல துறை, மின்சார துறை உள்ளிட்ட 16 துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த முகாமில் தாசில்தார் ஆறுமுகம், மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா, மருத்துவர் ஆனந்த ஜோதி, & போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி, தனி தாசில்தார் ரேவதி துணை வட்டாட்சியர் ஜெகதீசன், துணைத் தலைவர் கார்த்திகா, கவுன்சிலர்கள் கார்த்திகேயன், லட்சுமி, கீதா, யதிந்தர்,  ரீனா, புவனேஸ்வரி, அபிராமி, சிவகுமார், வெங்கடேசன், சுகந்தி மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->