Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு பை பாஸ் சாலையில் நகர பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாஸ் சாலையில் பாலக்கோடு நகர பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழா நகர தலைவர் கனேசன் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு   மாவட்ட துணைத் தலைவர் முரளி, தொகுதி பொறுப்பாளர் தெய்வமணி, மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சிவா, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பிணர் பாஸ்கர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது, வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில் பூத் கமிட்டி அமைக்ககவும், கூடுதலாக கட்சியில் உறுப்பிணர்களை சேர்க்கவும், மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைக்க  வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் பேசினார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதேவி,  கிருஷ்ணன், நகர பொது செயலாளர்கள் முனிராஜ், தண்டபாணி,  நகர துணை தலைவர் ராமரு, நகர பொருளாளர் முனியப்பன், நகர செயலாளர்கள் நந்தகிரி, பெரியசாமி, அன்பரசு, சதாசிவம், நகர இளைஞர் அணி தலைவர் ஐயப்பன், நகர மீனவர் அணி தலைவர் மதேஷ், கிளை தலைவர் மாது, உள்ளிட்ட ஏராளமான பாஜக கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.அணைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies