Type Here to Get Search Results !

காவாப்பட்டி, குத்தலஅள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக அரசு மது பாணம் விற்ற பெண் உட்பட 2 பேர் கைது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு  போலீசாருக்கு இரகசிய  தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது பாலக்கோடு அடுத்த குத்தல அள்ளி  மற்றும் காவாப்பட்டி  கிராமத்தில் வீட்டில் வைத்து அரசு  மதுபானங்களை சட்டவிரோதமாக  விற்பனை செய்வது  தெரிய வந்தது.


அவர்களை   பிடித்து விசாரித்ததில்  குத்தல அள்ளியை சேர்ந்த ருக்கு(வயது. 50) மற்றும் காவாப்பட்டியை சேர்ந்த ஜம்பேரி (வயது. 65)என்பதும்  அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும்  தெரிய வந்தது,


இருவரையும் கைது செய்த பாலக்கோடு   போலீசார் அவர்களிடமிருந்த  2ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 180 மில்லி அளவுள்ள  20 குவாட்டர்  பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies