Type Here to Get Search Results !

புதிய மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் திறந்துவைத்து SP.வெங்கடேஸ்வரன் MLA.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி  ஒன்றியம், டொக்குபோதனஅள்ளி ஊராட்சி, பூவல்மடுவு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூபாய் 17.43 இலட்சம் மதிப்பீட்டில், புதிய மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத் தலைவர் மகேஷ்வரிபெரியசாமி, பாமக மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிஅறிவு, ஒன்றிய கவுன்சிலர்கள் காமராஜ், மாவட்ட துணை தலைவர் முத்துவேல், கூட்டுறவு சங்க தலைவர் ராணிசுப்ரமணி, கூட்டுறவு சங்க செயலாளர் சேட்டு, வார்டு உறுப்பினர்கள் சித்ரா, முருகன், பத்மா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies