Type Here to Get Search Results !

வெங்கட்டம்பட்டி பகுதிநேர நியாய விலை கடையை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பார்வையிட்டு ஆய்வு.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி  ஒன்றியம், மாதேமங்கலம் ஊராட்சி, வெங்கட்டம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பகுதிநேர நியாய விலை கடையை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, ராகி, சர்க்கரை போன்றவற்றை ஆய்வு செய்தார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சீரான முறையில் பொருட்களை வழங்க வேண்டுமெனவும், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தரமான ராகியை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்வில், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரிபெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுதாசினிசெல்வம், ஒன்றிய செயலாளர் அன்புகார்த்திக், ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கார்த்திக், ஒன்றிய பொறுப்பாளர் ரங்கநாதன், ஒன்றிய பசுமைத் தாயக தலைவர் கண்ணதாசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊர்பொதுமக்கள் பலர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies