Type Here to Get Search Results !

கட்சிப்பணியாற்ற மீண்டும் வாய்ப்பு பெற்றமைக்காக அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மாரண்டஹள்ளி பேரூராட்சி கவுன்சிலர்.


தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி கவுன்சிலராக இருப்பவர் எம்.ஆர்.கார்த்திகேயன் இவருக்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அப்போதைய கட்சி நிர்வாகம் சீட்டு வழங்காததால், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மாரண்டஅள்ளி பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார், இதனால் ஓர் ஆண்டுக்கு முன்பு கட்சி தலைமை இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து  தற்காலிகமாக விலக்கி வைத்திருந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் துரைமுருகன், எம்.ஆர் கார்த்திகேயன் மீண்டும் கட்சிப்பணியாற்ற வாய்ப்பு வழங்கி உத்தரவிட்டார். 


இதனையோட்டி தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர்  பி.கே.அன்பழகன். காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் எம்.வி.டி.கோபால், மாரண்டஅள்ளி பேரூர் கழக  செயலாளர் மற்றும் பேரூராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884