Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே ஆதனூரில் டாஸ்மார்க் கடை அமைக்க ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு.


தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தினந்தோறும் அதிக அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றன.  இந்த நிலையில் இந்த கடையை பென்னாகரம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் விளை நிலங்களுக்கு இடையே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.


தொடர்ந்து அதற்கான பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மார்க் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் உள்ளனர். 


இந்த நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க உள்ள கட்டிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .அப்போது அவர்கள் விவசாய நிலங்களுக்கு இடையே டாஸ்மார்க் மதுபான கடை அமைக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும். 


இந்த வழியாக அத்தியாவசிய பணிகள் மற்றும் கல்விக்கூடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி டாஸ்மார்க் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர். 


இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies