Type Here to Get Search Results !

பாலக்கோடு அடுத்த தொட்டரதனஹள்ளியில் பராமரிப்பின்றி தினம்தோறும் பல ஆயிரம் லிட்டர் ஓகேனக்கல் குடிநீர் வீணாகும் அவலம்


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டுக்காரனஹள்ளி ஊராட்சி தொட்டாரதனஹள்ளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம பொதுமக்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தினந்தோறும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் ஏற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தினம்தோறும் நிரம்பி வழிவதால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஒகேனக்கல் குடிநீரை சீராக அனைத்து பகுதிகளுக்கும் சீராக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies