Type Here to Get Search Results !

பொம்மிடி அருகே வாலிபர்கள் மீது கொலை வெறி தாக்குதல் ஒருவர் கைது சிறையில் அடைப்பு.


பொம்மிடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர் மீது கற்களைக் கொண்டு கொலை வெறி தாக்குதல் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பி.குறிஞ்சிப்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஹரிஷ் வயது 25, இவர் இதே பகுதியில் லேப்டாப் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகின்றார்.

இவர் கடந்த 7ஆம் தேதி பொம்மிடி அருகே உள்ள பி, பள்ளிப்பட்டி லூர்து புறம் ஜெபி மாதா கோவில் அருகில் தனது நண்பர் நந்தகுமாருடன் நின்று கொண்டிருந்தார், அப்போது அந்தப் பக்கம் வந்த பி, பள்ளிப்பட்டி லூர்துபுரத்தை சேர்ந்த ஜான் கென்னடி என்கின்ற சிங்கிலி வயது 25 அவர்களிடம் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.


அப்போது இருவருக்கும் இடையே வாய் மோதல் முற்றியுள்ளது, இந்த நிலையில் ஜான் கென்னடி என்கின்ற ஜிங்கிலி ஆக்ரோசமாக ஹரிஷ் மீது அருகில் இருந்த கற்களை கொண்டு அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, கொலை வெறி தாக்குதல் தொடுத்துள்ளார், இதில் தலைப்பகுதியில் காயமடைந்த ஹரிஷ் தனது நண்பனின் இருசக்கர வாகனம் மூலமாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.


இவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பொம்மிடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்னேஷ், லூர்துபுரத்தை சார்ந்த ஜான் கென்னடி மீது வழக்குப்பதிவு செய்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட ஜான் கென்னடி என்கின்ற ஜிங்கிலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies