Type Here to Get Search Results !

பாலக்கோடு ஒன்றிய அலுவலகத்தில் கையில் மது பாட்டிலுடன் பிடிப்பட்ட பி.டி.ஓ. ஊழியர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ-வாக பணியாற்றி வருபவர் பாப்பிரெட்டிபட்டியை  சேர்ந்த சங்கர் (53) என்பவர் அலுவலக பணி நேரத்தில் மது போதையில் இருப்பதாக பொதுமக்கள் எழுப்பிய குற்றசாட்டில் பாலக்கோட்டில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு  மாற்றப்பட்டார்.

மீண்டும் கடந்த 10மாதங்களுக்கு முன்பு பாலக்கோடு பிடிஓ அலுவலகத்திற்க்கு பணி மாறுதலாகி வந்த நிலையில் தினமும் மது அருந்திவிட்டு போதையில் அலுவலகத்திற்க்கு வருவதாகவும், சில நேரங்களில் அலுவலகத்திலேயே அமர்ந்து மது அருந்துவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும் இவரது மதுபழக்கத்தை பயன்படுத்தி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப்பணிகளின் ஒப்பந்ததாரர்கள் பி.டி.ஓ. சங்கரிடம் காசோலை பெறுவதற்கு மதுவை வாங்கி கொடுத்து காரியம் சாதித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வந்தனர்.


இந்ந நிலையில் ஒப்பந்ததாரர் ஒருவர் பி.டி.ஓ சங்கருக்கு மது வாங்கி கொடுத்து  கையில் மது பாட்டிலுடன் பி.டி.ஓ சங்கர் இருக்கையில் அமர்ந்து இருக்கும்  புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைராகி வரும் சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies