Type Here to Get Search Results !

பாலக்கோடு அடுத்த கணவனஹள்ளியில் ஸ்ரீமகா கணபதி ஸ்ரீசத்திமாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கணவனனஹள்ளி கிராமத்தில் அருள்மிகு  ஶ்ரீமஹாகணபதி, ஸ்ரீ சக்திமாரியம்மன் மற்றும் நவகிரகம் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு திருநெறி தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்திப்மகா கும்பாபிஷேக பெருவிழா நடைப்பெற்றது. 


இந்த விழா கடந்த 19ம் தேதி  ஞாயிற்றுகிழமை கொடியேற்றி கணபதி பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நாளான நேற்று  அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, திருச்சுற்றுக் கலச நீராட்டு,  ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, பூர்ணாஹநிதி நடந்தது. 


இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை பட்டாச்சியர்கள், ஊர் கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். 


பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து   ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீசக்திமாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால்  அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு  மகா தீபாரதனை காட்டப்பட்டது. ஸ்ரீ மகா கணபதி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


இந்தவிழாவையொட்டி  காலை முதல்  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884