Type Here to Get Search Results !

அரூர் கிளை சிறைச்சாலையில் சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஜி வினோத் ஆய்வு.


அரூர் கிளை சிறைச்சாலையின் தலைமை வார்டன் மதுபோதையில் பணி செய்ததால் பணியிடை நீக்கம் சேலம் மத்தியில் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள அரூர் கிளை சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது, கிளை சிறையில் சிறை காப்பாளர், காவலர்கள், சமையலர் 13 பேர் பணியாற்றி வருகின்றனர். 


இந்நிலையில் நேற்று குடிபோதையில் பணியில் ஈடுபட்ட தலைமை வார்டன் அசோக்குமார் மது போதையில் இருந்ததாக புகார் எழுந்தது இதனையடுத்து அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை செய்துள்ளனர், சோதனையின் போது மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. 


இதனையடுத்து சிறைத்துறை டிஜிபி-க்கு இது குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறைத்துறை டிஜிபி அம்ரீஷ் புஜாரி உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் ஜி வினோத் மது போதையில் பணி செய்த தலைமை வார்டன் அசோக்குமார் என்பவரை இன்று பணியிடை நீக்கம் செய்தார்.


தொடர்ந்து அரூர் சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பாளர் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் பதிவேடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது அரூர் கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளர் அருண் உடன் இருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies