Type Here to Get Search Results !

தருமபுரி மற்றும் அரூர் கோட்டத்தில் வருகின்ற 21.11.2023 சிறப்பு பட்டா முகாம்கள் நடைபெறவுள்ளது.


முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டுதருமபுரி மாவட்டத்தில் சிறப்பு பட்டா முகாம்கள் தருமபுரி மற்றும் அரூர் கோட்டத்தில் வருகின்ற 21.11.2023 அன்று நடத்தப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

 

முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா 2023 ஜீன் மாதம் முதல் 2024 ஜீன் மாதம் வரை நடைப்பெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

 

இந்நேர்வில், தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு பட்டா முகாம் கோட்டம் ஒன்றிற்கு தலா ஒரு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதுஇந்த சிறப்பு பட்டா முகாமில் கீழ்காணும் மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் வழங்கப்படவுள்ளது:

  1. நில உடமை தொடர்பான அனைத்து பிரச்சனைகள்
  2. UDR-திருத்தம்
  3. பட்டா மேல்முறையீடு
  4. பட்டாவில் உள்ள பிழை திருத்தம்
  5. பட்டாவில் உள்ள பெயர் திருத்தம்
  6. நத்தம் நிலவரிதிட்ட புது பட்டா
  7. கணிணி சிட்டாவில் ஏற்பட்டுள்ள பிழை திருத்தம்
  8. இலவச வீட்டுமனைப் பட்டா

.

எண்

கோட்டம்

முகாம் நடைபெறும் நாள்

முகாம் நடைபெறும் இடம்

கண்கானிப்பு அலுவலர்

1.

தருமபுரி

21.11.2023

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தருமபுரி.

வருவாய் கோட்டாட்சியர்,

தருமபுரி.

2.

அரூர்

பொன் கற்பகம் திருமண மண்டபம், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், அரூர்

வருவாய் கோட்டாட்சியர், அரூர்


எனவேபொதுமக்கள் இச்சிறப்பு முகாமை நன்கு பயன்படுத்தி நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies