Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நில தரகர்கள் நலச்சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி மற்றும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நில தரகர்கள் நலச்சங்கத்தின் தலைவர் டாக்டர் விருகை கண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி காந்தி ஜெயந்தி மற்றும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.


பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பீமன் என்கிற ஜடையன் தலைமை வகித்தார்,தொடக்க நிகழ்ச்சியாக மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நில தரகர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ்குமார், மாநிலத் துணைத் தலைவர் ஹேமநாதன், மாநில துணைத்தலைவர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.


முன்னதாக பென்னாகரம் டெம்போ ஸ்டாண்ட் அருகில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நில தரகர்கள் நலச்சங்கத்தின் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ,தர்மபுரி மாவட்ட செயலாளர் அப்புசாமி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் காந்திராஜ், தர்மபுரி மாவட்ட துணைத் தலைவர்கள் மணி, குமரவேல், மாவட்ட துணை செயலாளர் அன்பழகன் பெண்ணாகரம் ஒன்றிய தலைவர் விஜயபாலாஜி, ஒன்றிய செயலாளர் பி.கே.குமார், பொருளாளர் வெங்கடேஷ், துணைத் தலைவர்கள் ராஜா, முனிமாது துணைச் செயலாளர்கள் மாதையன், தங்கவேல்  பெண்ணாகரம் நகர கௌரவ தலைவர் மாரியப்பன், நகரத் தலைவர் தேவராஜ், நகர செயலாளர் விக்னேஸ்வரன், நகர பொருளாளர் செல்வகுமார், துணைத் தலைவர் முத்து, துணைச் செயலாளர் பவுனேசன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies