Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

நேரு யுவ கேந்திராவின் சார்பில் நல்லம்பள்ளி வட்டார அளவிலான புனித மண் கலசம் தேசத்திற்கு வழங்கும் நிகழ்வு


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் என் மண் என் தேசம் திட்டத்தின் அடிப்படையில் நல்லம்பள்ளி வட்டார அளவிலான புனித மண் கலசம் தேசத்திற்கு வழங்கும் நிகழ்வு ஏ ஜெட்டிஅள்ளியில் உள்ள சுவாமி விவேகானந்தர் செவிலியர் கல்லூரியில் தாளாளர் சகோதரி வசந்தராணி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னாள் இராணுவ வீரர்கள் ராதாகிருஷ்ணன், சம்பத் ஆகியோரை சட்டமன்ற உறுப்பினர் சால்வை மற்றும் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். அதியமான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், கவுன்சிலர் சோனியா வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல்துறை சார்பில் ஆய்வாளர் மகாலிங்கம், செவிலியர் கல்லூரியின் முதல்வர் மங்கையர்க்கரசி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட முன்னாள் திட்ட அலுவலர் புஷ்பலதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


உறுதிமொழி ஏற்பு, பேரணி, விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். 300க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக நல்லம்பள்ளி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884