Type Here to Get Search Results !

பாலக்கோடு டவுன் பஸ் ஸ்டாண்ட் பேரூராட்சி வணிக கட்டிடத்தில் ஏற்படும் புகையால் பொதுமக்கள் அவதி.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு டவுன் பஸ்ஸ்டாண்ட் அருகில் அரசு வணிக நிறுவன கட்டிடம்  செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் பேக்கரி, வாழைப்பழம் கடை, சிக்கன் கடை, டீ கடை, மகளிர் காவல் நிலையம் உள்ளிட்டவை செயலபட்டு வருகிறது. இதில் பேக்கரி கடையின் முதல் தளத்தில் பேக்கரி கடைக்கு தேவையான இனிப்பு மற்றும் காரவகைகள் உற்பத்தி செய்கின்றனர்.


புகை கூண்டு முறையாக அமைக்காததால் பேருந்து நிலையத்திற்கு வரும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் அருகில் உள்ள வணிக கடைகளில் வசிப்பவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள்  ஏற்பட்டு வருகின்றன.


மேலும் கட்டிடத்தின் ஓரம் வைக்கப்பட்டுள்ள வாழைப்பழம் கடையால் தினந்தோறும் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டு வருகிறது. கட்டிடத்தில் தண்ணீர் தொட்டி நிரம்பி வழியும் போது சாலையில் செல்லும் பொதுமக்கள் மீது விழுந்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.


எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு  பேரூராட்சி வணிக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884