Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் ஆயுஷ்மான்பவ வாராந்திர சுகாதார சிறப்பு முகாம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மத்திய சுகாதாரத் துறை சார்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது, அதனை தொடர்ந்து  சுகாதாரத்துறை சார்பில்  ஆயுஷ்மான் பவ என்ற திட்டத்தின் மூலம்  ஒவ்வொரு மருத்துவமனையிலும் சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற அறிவுறுத்தப்பட்டது.


இதை ஒட்டி பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சுகாதார நல பணிகள் இணை இயக்குநர் டாக்டர்.சாந்தி முன்னிலை வகித்தார் பாலக்கோடு  தலைமை மருத்துவர். பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைப்பெற்றது.


இந்த முகாமில் மருத்துவர்கள் சசிரேகா, பாலசுதா, தீபிகா உள்ளிட்ட மருத்துவ குழுவினரால் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், சக்கரை நோய் இருதயநோய் மற்றும்  காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, கண் சிகிச்சை தொடர்பான பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ சேவை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


இம்முகாமில்  மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies