Type Here to Get Search Results !

பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் ஆடிப்பெருக்கு விழாவில் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஜி.கே. மணி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.


பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் ஆடிப்பெருக்கு விழாவில் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஜி.கே. மணி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில், ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் நடைப்பெற்றது.


இந்த நிலையில்  ஆடிப்பெருக்கு என்பதால், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் விழா விற்கு வரும் பொது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையம், அமருமிடம், குடிநீர் வசதிகள், கழிப் பிட வசதிகள். கூட்ட நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கைகள், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப் பாக்குளிக்கும் இடங்கள். பிரதான அருவி, பயணி களுக்கு ஏற்படுத்தப்பட் டுள்ள வசதிகள், சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை மற்றும் போலீசார் பாது காப்பு வசதி ஆகியவற்றை பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது பென்னாகரம் டி.எஸ். பி மகாலட்சுமி, பாமக மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய தலைவர் அருள் , பென்னாகரம் நகரத் தலைவர் சந்தோஷ், மற்றும் நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884