Type Here to Get Search Results !

தொப்பூர் முதல் மேட்டூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை தொடர்பான கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார், தருமபுரி MP.


தர்மபுரி எம்.பி. செந் தில்குமார் புதுடில்லியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களை நேரில் சந்தித்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பூர் முதல் மேட்டூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இருவழிப் பாதை சுமார் 33 கிலோ மீட்டர் தற்பொழுது அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.


அகலப்படுத்தும் பணி முடிந்தவுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தொப்பூர் முதல் மேட்டூர் வரையில் ஒரு இடத்திலும் சுங்க சாவடி அமைப்பதற்கும் ஈரோடு மாவட்ட பகுதியின் மற்றொரு கங்கசாவடி அமைப்பதற்கும் தயாராக உள்ளனர். இதுபோன்ற இருவழி பாதையை சுமார்  1.5 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தி விட்டு சுங்கசாவடியினை அமைப்பது என்பது இப்பாதையை பயன்படுத்தும் பல நூறு கிராம மக்கள் அன்றாட போக்குவரத்தை பாதிக்கும் மேலும் நான்கு சக்கரவாகனங்கள்  கார் மற்றும் மினி லாரிகள்  போன்ற போக்குவரத்து அதே நேரத்தில் தற்பொமழுது விரிவாக்கம் செய்யப் படும்சாலை சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கு தகுதி இல்லாத சாலை ஆகும் . 


இதுவரை நான்கு வழி சாலையில் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சுங்கசாவடிகள் அமைத்து வந்தன. தமிழகத்தில் தற்பொழுது இதுபோன்ற இருவழிச் சாலை வழி பாதையில்  இப்பகுதி பொதுமக்கள் தனது ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை, ஆகவேதாங்கள் சுங்க சாவடிஅமைப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே இது சம்பந்தமாக கடந்த ஜூலை   ஆகஸ்ட் மாதங்களில் இருமுறை சென்னையில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை துறையின் பொது மேலாளருக்கும் அதன் பிறகு ஜூலை முதல் வாரத்தில் புதுடெல் லியில் அமைந்துள்ள தமிழ்நாடு பிரிவு முதுநிலை பொது மேலாளரிட மும் விரிவாக கடிதம் வாயிலாக சுங்கச்சாவடி அமைக்க கூடாது என தான் எதிர்ப்பு தெரிவித் துள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


இது தொடர்பாக அவரும் ஆய்வு செய்து நடவ டிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளதாகவும் தர்மபுரி எம்பி டி.என்.வி.எஸ். செந்தில்குமார் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884