மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ 93 பயனாளிகளுக்கு ரூ.2.97 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்‌. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ 93 பயனாளிகளுக்கு ரூ.2.97 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்‌.


தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்டரங்கில்‌ இன்று நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ஆப., அவர்கள்‌ 93 பயனாளிகளுக்கு ரூ.2.97 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்‌.

தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்டரங்கில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (07.08.2023) நடைபெற்றது. இம்மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பொதுமக்களின்‌ கோரிக்கை மனுக்களுக்கு அதீத முக்கியத்துவம்‌ அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள்‌. அந்த வகையில்‌ ஒவ்வொரு வாரம்‌ திங்கட்கிழமைகளில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெறும்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள்‌ காணப்பட்டு வருகிறது.


இன்றைய தினம்‌ நடைபெற்ற மக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ பொதுமக்கள்‌ சாலை வசதி, குடிநீர்‌ வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள்‌ வேண்டியும்‌, பட்டா மற்றும்‌ சிட்டா பெயர்‌ மாற்றம்‌, பட்டா வேண்டுதல்‌, புதிய குடும்ப அட்டை வேண்டுதல்‌, வாரிசு சான்றிதழ்‌, வேலைவாய்ப்பு, (இலவச வீட்டுமனை பட்டா, முதியோர்‌ ஓய்வூதியத்‌ தொகை உள்ளிட்ட இதர உதவித்‌ தொகைகள்‌ உட்பட பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்தும்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள்‌, உதவி உபகரணங்கள்‌ வேண்டியும்‌ மொத்தம்‌ 429 மனுக்கள்‌ வரப்பெற்றன.


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள்‌ அனைத்தும்‌, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம்‌ வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன்‌ வழங்கிட வேண்டுமெனவும்‌. பொதுமக்கள்‌ அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள்‌ மீது துறை அலுவலர்கள்‌ அரசின்‌ விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும்‌ எனவும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ௫ஆப., அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌.


இம்மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள்‌ அரூர்‌ ஊராட்சி ஒன்றியத்தில்‌ வசிக்கும்‌ பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள்‌ ஏற்படுத்துதல்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 67 பயனாளிகளுக்கு தலா ரூ.4,37,430/- வீதம்‌ மொத்தம்‌ ரூ.2,93,07,810/- மதிப்பீட்டில்‌ வீடுகள்‌ கட்டுவதற்கான வேலை உத்தரவு ஆணைகளையும்‌, பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்தின்‌ சார்பில்‌ 11 பயனாளிகளுக்கு ரூ.72,072/- மதிப்பீட்டில்‌ சலவைப்பெட்டிகளையும்‌, கிறித்துவ மகளிர்‌ உதவும்‌ சங்கத்தின்‌ மூலம்‌ சிறுதொழில்‌ செய்வதற்கு 15 பயனாளிகளுக்கு ரூ.3.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மானிய நிதிஉதவிகளையும்‌ என மொத்தம்‌ 93 பயனாளிகளுக்கு ரூ.2.97 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்‌.


மேலும்‌, கொடிநாள்‌ நிதி அதிகமாக வசூல்‌ புரிந்த 3 மாவட்ட அலுவலர்களுக்கு பதக்கம்‌ மற்றும்‌ பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ௫ஆப., அவர்கள்‌ வழங்கினார்கள்‌. இம்மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ கூடுதல்‌ ஆட்சியர்‌ (வளர்ச்சி) திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, 'ஒஆப., தனித்துணை ஆட்சியர்‌ (சமூக பாதுகாப்புத்‌ திட்டம்‌) (பொ) திருமதி.நசீர்‌ இக்பால்‌, மாவட்ட வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்பு அலுவலர்‌ திரு.ஜெ.ஜெயக்குமார்‌, பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறும்பான்மையினர்‌ நல அலுவலர்‌ திரு.ராஜசேகரன்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலர்‌ திரு.பி.எஸ்‌.கண்ணன்‌, முன்னாள்‌ படைவீரர்‌ நல அலுவலர்‌ திரு.எஸ்‌.வெங்கடேஷ்குமார்‌ உட்பட தொடர்புடைய அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

கருத்துகள் இல்லை:

Post Top Ad