Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு பனங்காடு முத்துகவுண்டர் தெருவில் ஶ்ரீ மகா முத்துமாரியம்மன் கோவில் 23ம் ஆண்டு திருவிழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


பாலக்கோடு பனங்காடு  முத்துகவுண்டர் தெருவில்  ஸ்ரீமகாமுத்துமாரியம்மன் கோவில்  23ம் ஆண்டு   திருவிழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவானது நேற்று முன்தினம் கனபதி பூஜை செய்து கொடியேற்றத்துடன் தொடங்கியது.


அதனை தொடர்ந்து அம்மனுக்கு கொலு வைத்தல், கங்கா பூஜை, கோபூஜை, நவக்கிர சாந்தி ஹோமம், பஞ்சசுத்தி ஹோமம், உள்ளிட்டவை நடைப்பெற்றன. நேற்று பனங்காடு ஊர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர் அம்மா அனுப்புதல் நிகழ்சி நடைப்பெற்றது.


முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே ஸ்ரீ மகா முத்துமாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு  மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம் எடுத்தும். அம்மன் வேடம் தரித்தும்  தங்களது நேர்த்திகடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.


ஆங்காங்கே பொதுமக்கள், பக்தர்களுக்கு கூழ் மற்றும் நீர் மோர் வழங்கினர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884