Type Here to Get Search Results !

பிரசவித்த தாய்மார்களுக்காக சிறப்பு A/C வாகனம்; கொடியசைத்து துவக்கிவைத்த MP.


அரூர் மற்றும் பென்னாகரம் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் மருத்துவமனையிலிருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்ப 2  குளிர்சாதன வசதி கொண்ட வாகனங்களைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்கப்பட்ட வாகனங்களை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. DNV. S.  செந்தில் குமார் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.


இதன் பிறகு செய்தியாளர்களிடம் பிஷேக்கும்போது, "தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பென்னாகரம் மற்றும் அரூர் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய் மற்றும் சிசு பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்ல இரண்டு ஏசி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் இரண்டு வாகனங்கள் வழங்கக்கோரி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மத்திய அரசிடம் கேட்டும் வழங்காத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து வாகனங்களை வழங்கி இருக்கிறோம்.


முக்கியமாக கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்கள் பிறந்த குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அதன் காரணமாக ஆம்புலன்ஸ் போல் இல்லாமல் சுற்றுலா வாகனம் போல் ஏசி வசதியுடன் 12 நபர்கள் செல்லக் கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பென்னாகரத்துக்கு வழங்கப்பட்ட வாகனம், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு பகுதிகளுக்கும்; அரூர் பகுதிக்கு வழங்கப்பட்ட வாகனம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கும் பயன்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஏசி பொருத்தப்பட்ட வாகனம் தமிழ்நாட்டில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், தருமபுரி மாவட்டத்தில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படும் தொப்பூர் பகுதியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைத்துள்ளனர். வனப்பகுதியில் 3.5 ஹெக்டேர் தனியாரிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. மேலும், ஜனவரி மாதத்தில் வேலை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


அதுமட்டுமில்லாமல் மத்திய அரசிடம் தருமபுரி அரசு மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒதுக்கீடு வரும் பொழுது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது. மேலும், தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை நிலம் கையகப்படுத்துவதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 70 சதவீத நிலங்களை கையகப்படுத்திய பின்பு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies