தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் பயணிகளின் வசதிக்காக 20 கோடி செலவில் வரவேற்பு மையம் கடைகள் காவேரி கரையில் உணவகம், பரிசல் துறைக்கான இடம், மசாஜ் செய்ய புதிய அறைகள் மற்றும் நவீன கழிப்பிடம் போன்ற தற்போது வேகமாக நடைபெற்று வரும் நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் எம்பி அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பணிகளை துரிதமாகவும் தரமாகவும் சரியான நேரத்தில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அங்கு உள்ள ஒப்பந்ததாரர்களிடமும் துறை சார்ந்த அதிகாரிகளிடமும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் என பலரும் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக