
இணையதள இணைப்பு வசதி செய்துதரும் பொருட்டு தற்பொழுது தமிழ்நாடு மின் வாரிய மின் கம்பங்களின் மூலமாக கேபிள்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இக்கேபிள்கள் கண்ணாடி இழைகளால் ஆனது என்பதால் மின்சாரம் கடத்தாது. தமிழ்நாடு மின்வாரிய மின்கம்பங்களின் மூலமாக கொண்டு செல்ல தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை, இரயில்வே துறை ஆகிய சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
கண்ணாடி இழை கேபிள்கள் கொண்டு செல்லும் கம்பங்கள் தங்கள் விளைநிலங்களின் வழியே செல்வதாக தெரிவித்து விவசாயிகள் / தனிநபர்கள் எவரும் தடுக்கக்கூடாது. கண்ணாடி இழை கேபிள்கள் செல்வதை வேண்டுமென்றோ, தன்னிச்சையாகவோ வெட்டிவிட பொதுமக்கள் யாரும் முயற்சி செய்யக்கூடாது. கோவில் திருவிழாக்களின்போது முன்கூட்டியே சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
.gif)

